search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய வழக்கு"

    ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்டுகளை வைத்து உள்ள மோசடி மன்னன் நிரவ் மோடி மீது புதிய வழக்கு பதிவு செய்யப்படுகிறது. #NiravModi #FIR #Passport
    புதுடெல்லி:

    மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினர் நிரவ் சோக்சி உள்ளிட்டவர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பண பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    இது தொடர்பாக மோசடி மன்னன் நிரவ் மோடி உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் தலா 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த மோசடி வெளியுலகுக்கு தெரிய வருவதற்கு முன்பாகவே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்ட நிரவ் மோடி முதலில் இங்கிலாந்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் அவர் பெல்ஜியத்தில் இருப்பதாக உளவு அமைப்புகள் கண்டறிந்தன. அவரை நாடு கடத்திக்கொண்டு வந்து, வழக்கு விசாரணையை எதிர்கொள்ளவைப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.



    இந்த நிலையில், நிரவ் மோடியிடம் இப்போது 6 பாஸ்போர்ட்டுகள் இருப்பது தெரிய வந்து உள்ளது. அவற்றில் 2 பாஸ்போர்ட்டுகள் சில காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 4 பாஸ்போர்ட்டுகள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. நிரவ் மோடியால் பயன்படுத்தப்பட்டு வருகிற 2 பாஸ்போர்ட்டுகளில் ஒன்றில், அவரது முழுப்பெயர் உள்ளது. மற்றொன்றில் முழுப்பெயரின் முதல் பாதி பெயர் உள்ளது.

    இந்த பாஸ்போர்ட், இங்கிலாந்து நாட்டின் 40 மாத விசாவுடன் கூடியது ஆகும். இதை பயன்படுத்தித்தான் அனேகமாக அவர் பல்வேறு நாடுகளுக்கும் சென்று வருவதாக நம்பப்படுகிறது.

    அவரது முதல் பாஸ்போர்ட் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசால் ரத்து செய்யப்பட்டு விட்டது, நினைவுகூரத்தக்கது. இரண்டாவது பாஸ்போர்ட்டும் பின்னர் இந்திய அதிகாரிகளால் ரத்து செய்யப்பட்டு விட்டது.

    இவ்விரு பாஸ்போர்ட்டுகளும் ரத்து செய்யப்பட்டு விட்டது பற்றி சர்வதேச போலீசின் கவனத்துக்கு மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கொண்டு சென்று உள்ளது. ஆனால் ஒரே சீரான சர்வதேச வழிமுறைகள் இல்லாத காரணத்தால் அவரது பாஸ்போர்ட் ஆவணங்களை பல்வேறு நாடுகளில் சட்டப்பூர்வமாக தடை செய்ய முடியவில்லை.

    எனவே அவர் விமான நிலையங்கள், துறைமுகங்கள் வழியாகவும் பயணங்கள் செய்கிறார். அவரது பாஸ்போர்ட்டுகளை ரத்து செய்த உத்தரவுகள், அவருக்கு எதிராக சர்வதேச பிடிவாரண்டு அல்லது சர்வதேச தேடல் நோட்டீஸ் பிறப்பிக்க கோரும் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

    எனவே ரத்து செய்யப்பட்ட பாஸ்போர்ட்டுகளை நிரவ் மோடி பயன்படுத்தி வருவது கிரிமினல் குற்றம் ஆகும். அது மட்டுமின்றி தூதரக அந்தஸ்து அல்லது அரசு அதிகாரி அல்லது பிற சிறப்பு காரணங்கள் இன்றி ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் வைத்திருப்பதுவும் குற்றம் ஆகும்.

    எனவே ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்டுகளை வைத்து உள்ளது தொடர்பாக முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் நிரவ் மோடிக்கு எதிராக புதிய குற்ற வழக்கு பதிவு செய்யப்படும் என பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  #NiravModi #FIR #Passport #Tamilnews
    நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக புரட்சிகர மாணவர்கள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    சென்னை:

    புரட்சிகர மாணவர்கள் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

    ‘விருதுநகர் மாவட் டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியின் உதவி பேராசிரியர் நிர்மலா தேவி, உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி செல்போனில் மாணவிகளை வற்புறுத்தும் உரையாடல் ‘வாட்ஸ்அப்பில்’ வெளியானது. இதையடுத்து நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்கின்றனர்.

    இதற்கிடையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தின் தலைமையில், ஒரு விசாரணை குழுவை தமிழக கவர்னர் அமைத்துள்ளார். ஒரு குற்றச்செயலுக்கு இரு அமைப்பு விசாரணை நடத்தினால், அது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும்.

    எனவே, நிர்மலா தேவிக்கு எதிரான வழக்கை, டி.ஐ.ஜி. பதவிக்கு குறையாத பெண் போலீஸ் அதிகாரி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். அந்த விசாரணையை இந்த ஐகோர்ட்டு கண்காணிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழக தலைமை செயலாளர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு பதில் அளிக்கும் படி நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது. இந்த வழக்கு வருகிற 23-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

    இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக முன்கூட்டியே இன்று விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல், ஐகோர்ட்டில் முறையிட்டார்.

    ‘ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தின் விசாரணை முடிந்து, வருகிற 15-ந் தேதி அவர் தன்னுடைய விசாரணை அறிக்கையை தமிழக கவர்னரிடம் வழங்க உள்ளார். எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், இந்த வழக்கு கடைசியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உத்தரவிட்டனர்.


    ×